ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

விடிகின்ற பொழுது - ராம்

பாடியவர் : மதுமிதா
பாடல் : விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
படம் : ராம்
இசை : யுவன் ஷங்கர் ராஜா


விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
கடலலை கரையை கடந்திடுமா

விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
கடலலை கரையை கடந்திடுமா
காதலை உலகம் அறிந்திடுமா
நினைப்பது எல்லாம் நடந்திடுமா

விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
கடலலை கரையை கடந்திடுமா
காதலை உலகம் அறிந்திடுமா
நினைப்பது எல்லாம் நடந்திடுமா

உன்னாலே எனக்குள் உருவான உலகம்
பூகம்பம் இன்றி சிதறுதடா
எங்கயோ இருந்து நீ தீண்டும் நினைவே
எனை இன்னும் வாழ சொல்லுதட

தொடுகின்ற தூரம் எதிரே நம் காதல்
தொடுபோகும் நேரம் மரணத்தின் வாசல்

காதலும் ஓர் ஆயுதமாய் மாறிடுச்சே
மெல்ல மெல்ல என்னைக் கொள்ள துனிஞ்சிடுச்சே
தீயில் என்னை நிக்க வெச்சி சிரிக்கிறதே
தீர்ப்பு என்ன எந்தன் நெஞ்சு கேட்கிறதே

காட்டுத்தீ போல கண்மூடித் தனமாய்
என் சோகம் சுடர் விட்டு எரியுதடா
மனசுக்குள் சுமந்த ஆசைகள் எல்லாம்
வாய்ப்பொத்தி வாய்ப்பொத்தி நகருதடா
யாரிடம் உந்தன் கதை பேச முடியும்
வார்த்தைகள் இருந்தும் மௌனத்தில் கரையும்

பச்சை நிலம் பாலைவனம் ஆனதடா
பூவனமும் போர்க்களமாய் மாறுதடா
காலம் கூட கண்கள் மூடிக் கொண்டதடா
உன்னை விட கல்லறையே பக்கமடா

விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
கடலலை கரையை கடந்திடுமா
காதலை உலகம் அறிந்திடுமா
நினைப்பது எல்லாம் நடந்திடுமா

3 கருத்துகள்:

டக்கால்டி சொன்னது…

பாஸ்...எனக்கு மிகவும் பிடித்த பாடலில் இதுவும் ஒன்று...
ஒவ்வொரு வரியிலும் ஒளிந்திருக்கிறது தாயின் மீது, ஆளாகிவரும் ஒரு மகனுடைய அக்கறையும்,பாசமும்...

டக்கால்டி சொன்னது…

முடிந்தால் நான் மேற்கூறிய பாடலின் வரிகளை இடுகையாக இடுங்கள்..

vino சொன்னது…

i will do..

கருத்துரையிடுக