வியாழன், 18 பிப்ரவரி, 2010

மலைக்கோயில் வாசலில் - முத்து

பாடல் : மலைக்கோயில் வாசலில்
படம் : முத்து
இசை : இளைய ராஜா

 

மலைக்கோயில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே

முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
கொடு ஆயிரம் சுகங்களையே
முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
கொடு ஆயிரம் சுகங்களையே

மலைக்கோயில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே

நாடகம் ஆடிய பாடகன் ஒ..
நீ இன்று நான் தொடும் காதலன் ஒ..

நீ சொல்ல நான் மெல்ல மாறினேன்
நன்றியை வாய் விட்டு கூறினேன்

பேரழகும் சின்ன தேரழகும்
உன்னைச் சேராதா உடன் வாராதா

மானழகும் கெண்டை மீனழகும்
கண்கள் காட்டாத இசை கூட்டாதா

பாலாடை இவள் மேலாட
வண்ண நூலாடை இனி நீயாகும்

மலைக்கோயில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே

முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
கொடு ஆயிரம் சுகங்களையே

மலைக்கோயில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே

நானொரு பூச்சரம் ஆகவோ
மீழ்ப்புழல் மீதினில் ஆடவோ

நானொரு மெல்லிசை ஆகவோ
நாளும் உன் நாவினில் ஆடவோ

நான் படிக்கும் தமிழ் கீர்த்தனங்கள்
இங்கு நாள் தோறும் உந்தன் சீர்ப் பாடும்

பூங்கரத்தில் பசும் பொன்னிறத்தில்
வளை கூத்தாடும் உந்தன் பேர்ப் பாடும்

மாக்கோலம் மழைநீர் கோலம்
அந்த நாள் காணும் இந்த ஊர்கோலம்

மலைக்கோயில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே

முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
கொடு ஆயிரம் சுகங்களையே
முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
கொடு ஆயிரம் சுகங்களையே

மலைக்கோயில் வாசலில் கார்த்திகை தீபம் பொங்குது
விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக